தமிழக பட்ஜெட்டில் உயர்கல்வி துறைக்கு ஏமாற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2013

தமிழக பட்ஜெட்டில் உயர்கல்வி துறைக்கு ஏமாற்றம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், 22 புதிய கலை-அறிவியல் கல்லூரிகளும், ஒரு அரசு பொறியியல் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளதாக, பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2013-14ம் ஆண்டில், புதிய கல்லூரிகள் துவங்குவது குறித்து, எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.பிளஸ் 2 முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு, கல்வி கட்டணச் சலுகை அளிப்பதற்காக, நடப்பு ஆண்டில், 673 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 10.76 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுஇருந்த போதும், 4.86 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே, இலவச மடிக்கணினி வழங்கப்பட்டன.இந்த நிலையில், நடப்பு ஆண்டில், 5.65 லட்சம், மடிக்கணினிகள் வழங்கப்படும் என, அறிவிக்கப் பட்டு உள்ளது. இதற்காக, 1,500 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு திட்டங்களைத் தவிர, வேறு எந்த திட்டமும், உயர்கல்வித் துறையில் இடம்பெறவில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி