ஏழை மாணவர்கள் அதிகம் படிக்கும் அரசு கல்லூரிகளில், அம்மா உணவகம், திறக்கப்பட வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில், 62 அரசு கல்லூரிகள் உள்ளன. இவற்றில், ஏழை மாணவர்களே, அதிகம் படிக்கின்றனர். உயர் கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், சுழற்சி முறை திட்டத்தை, அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், காலை, மாலை என இரு வேளைகளிலும், வகுப்புகள் நடத்தப்படுகின்றன.காலை வகுப்புகளில், 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும், மாலை வகுப்புகளில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் படிக்கின்றனர். காலை வகுப்புகள், 8:30 மணிக்கு துவங்குவதால்,90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்லூரிகளுக்கு சாப்பிடாமலேயே வருகின்றனர்.விடுதிகளில் தங்க இடம் கிடைக்காத, திருத்தணி, திருவள்ளுர் உள்ளிட்ட தொலைதூரத்தில் இருந்து சென்னை வரும் மாணவர்கள், அதிகாலை, 5:00 மணிக்கே, வீடுகளிலிருந்து கிளம்ப வேண்டியுள்ளதால், காலை உணவு சாப்பிட முடிவதில்லை. இதனால், எந்த திராணியும் இன்றியே, வகுப்புகளை கவனிக்க வேண்டியுள்ளது.கல்லூரி மாணவர்களுக்கு, உணவு இடைவேளை என்பதே இல்லை. கிடைக்கும் நேரங்களிலும், தனியார் உணவகங்களை நாட வேண்டியுள்ளது. இங்கு சாப்பாடு, 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுவதால், ஏழை மாணவர்களுக்கு, எட்டாக்கனியாக உள்ளது. ஏழை மாணவர்கள் அதிகளவில் படிக்கும் அரசு கல்லூரிகளில், மலிவு உணவகத்தை அரசு திறக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி