பிளஸ் 2 மாணவர்கள் கல்வி தகுதி பள்ளியிலேயே பதிய ஏற்பாடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2013

பிளஸ் 2 மாணவர்கள் கல்வி தகுதி பள்ளியிலேயே பதிய ஏற்பாடு.

தமிழகம் முழுவதும், பிளஸ் 2 மாணவர்கள், தங்கள் கல்வித் தகுதியை, பள்ளி வளாகங்களிலேயே, இணைய தளம் மூலம், வேலைவாய்ப்புஅலுவலகத்தில் பதிவு செய்ய, பள்ளி கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.தமிழகத்தில், இந்த ஆண்டு, 8.53 லட்சம், மாணவ, மாணவியர், பிளஸ் 2 தேர்வு எழுதினர். பள்ளி மூலமாக தேர்வு எழுதியவர்களில், 7.4 லட்சம் மாணவ, மாணவியர், தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள், தங்கள் மதிப்பெண் சான்றிதழ்பெறும் நாளில், தங்களின் கல்வித்தகுதியை, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய, பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாணவ, மாணவியர், தங்கள் கல்வித் தகுதியை, வேலை வாய்ப்பக இணைய தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.மாணவ, மாணவியர், மதிப்பெண்சான்றிதழ் பெற, பள்ளிக்கு செல்லும்போது, தங்களது குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும். பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியை, ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்துள்ளவர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை, உடன் எடுத்து செல்ல வேண்டும்.புதிதாக பதிவு செய்வோருக்கு, புதிய பதிவு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை, பதிவு செய்யும் நாளிலேயே, உடனுக்குடன் வழங்கப்படும்.மாணவ, மாணவியர், மாற்றுத் திறனாளிகளாக இருந்தால், தங்களுடைய கல்வித் தகுதியை, பள்ளிகளில் பதிவு செய்த பின், தங்களுடைய முன்னுரிமையை, வேறு ஒரு வேலைநாளில், அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கு, நேரில் சென்று பதிவு செய்து கொள்ளவேண்டும்.பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், 27ம் தேதி, பள்ளிக் கல்வித் துறையினரால் வழங்கப்பட உள்ளது. எனவே, மாணவ, மாணவியர், 27ம் தேதியிலிருந்து, அடுத்த மாதம், 10ம் தேதிக்குள், அந்தந்த பள்ளிகளிலேயே பதிவு செய்து, வேலைவாய்ப்புஅடை யாள அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்யப்படும், மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 2 கல்வித் தகுதிக்கு, 27ம் தேதியிட்ட பதிவு மூப்பு வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி