குரூப்- 4 தேர்வு எழுதுவோருக்கு, இலவச பயிற்சி வழங்க, வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், அரசு துறைகளில் காலியாக உள்ள 5,666 உதவியாளர், சுருக்கெழுத்தர் காலிபணியிடங்களுக்கு, ஆகஸ்ட்டில் தேர்வு நடத்த உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. குரூப் - 4 தேர்வுகளில், அதிகளவில் கிராமப்புற பட்டதாரிகள் தான் விண்ணப்பிப்பர்.தேர்வுக்கு தயாராக, அவர்களுக்கு போதிய வசதி இருக்காது. எனவே, குரூப் - 4 தேர்வு எழுதும் பட்டதாரிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த, வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு, அரசுஉத்தரவிட்டுள்ளது.வேலைவாய்ப்பு அலுவலர் தொண்டீஸ்வரன் கூறுகையில், "குரூப்- 4உட்பட அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கும், அனைத்து தேர்வுகளை சந்திக்கும் பட்டதாரிகளுக்கு, அரசு சார்பில் இலவசமாக பயிற்சி வகுப்புகளை நடத்த, வேலைவாய்ப்புத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.இதற்காக, பயிற்சி அளிக்கும் ஒரு நபருக்கு, ஒரு மணி நேரத்திற்கு ரூ.100 வீதம், மதிப்பூதியம் வழங்கவும், அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மூலம், அரசு பணிகளுக்கு சென்ற, ஊழியர்களை வைத்தும், பயிற்சி அளிக்கலாம்" என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி