பிளஸ் 2 உடனடி தேர்வு: 20.5 சதவீதம் பேர் தேர்ச்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2013

பிளஸ் 2 உடனடி தேர்வு: 20.5 சதவீதம் பேர் தேர்ச்சி.

பிளஸ் 2 உடனடித்தேர்வில், வெறும், 20.5 சதவீத மாணவ,மாணவியர் தேர்ச்சி பெற்றனர். தேர்வுக்கு விண்ணப்பித்த, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆப்சென்ட் ஆனதாகவும், 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகள், பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி துறை வட்டாரங்கள் தெரிவித்தன.பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவ, மாணவியர், சம்பந்தப்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெற்று, அதே கல்வியாண்டில், உயர்கல்வியை தொடரும் வகையில், உடனடித் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், இந்த தேர்வுக்கு தயாராக, போதிய கால அவகாசம் இல்லாத நிலையில், மாணவர்கள், தேர்வை சந்திக்க வேண்டியுள்ளது. இதனால், தேர்ச்சி சதவீதம், பெரிய அளவிற்கு உயரவில்லை.ஒவ்வொரு முறையும், 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலான மாணவர்கள், தேர்ச்சி பெறுவர். இந்த முறை, பிளஸ் 2 உடனடித் தேர்வில், வெறும், 20.5 சதவீத மாணவர்கள் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வெழுதிய 66,576 மாணவர்களில், 13,629 மாணவர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர். உடனடித் தேர்வு தேர்ச்சி சதவீதம், படிப்படியாக குறைந்து வருவதால், இத்திட்டம் அவசியமா என்ற கேள்விஎழுந்துள்ளது. உடனடித் தேர்வு நடந்த இரு மாதங்களில், செப்டம்பர், அக்டோபரில், தனித்தேர்வு வருகிறது.பொதுத் தேர்வுக்குப் பின், செப்டம்பர், அக்டோபர் தேர்வை சந்திக்க, போதிய கால அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி