பி.எட்., சேர்க்கைக்கான, ரேங்க் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், 30ம் தேதியில் இருந்து, சென்னையில் நடக்கிறது.தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில், 2,118 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டில், இந்தஇடங்களை நிரப்ப, கடந்த 9ம் தேதியில் இருந்து, 16ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. 12 ஆயிரம் விண்ணப்பங்கள், விற்பனை ஆயின.இதில், 11,950 விண்ணப்பங்கள், பூர்த்தி செய்த நிலையில், திரும்ப பெறப்பட்டன. இதையடுத்து, லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்,www.ladywillingdoniase.comஎன்ற இணையதளத்தில், நேற்று, ரேங்க் பட்டியலை வெளியிட்டது.மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில், வரும், 30ல் துவங்கி, செப்., 5ம் தேதி வரை நடைபெறும் என, பி.எட்., சேர்க்கை செயலர், பரமேஸ்வரி தெரிவித்து உள்ளார். தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு, அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும், கடிதங்கள் கிடைக்காதவர்கள், நேரடியாக, கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனவும், பரமேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி