குரூப் 4 தேர்வு முடிவு அக்டோபர் அல்லது டிசம்பரில் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2013

குரூப் 4 தேர்வு முடிவு அக்டோபர் அல்லது டிசம்பரில் வெளியீடு.

குரூப்–4 தேர்வில் பொதுஅறிவில் இருந்து 100 கேள்விகளும், தமிழ் அல்லது ஆங்கில பாடத்தில் இருந்து 100 கேள்விகளும் (மொத்தம் 200 கேள்விகள்) கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 1½ மதிப்பெண் வீதம் மொத்த மதிப்பெண் 300. எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டாலே வேலை உறுதி. காரணம் குரூப்–4 தேர்வுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது. தேர்வு முடிந்த ஓரிரு நாளில் வினாக்களுக்கான ’கீ ஆன்சர்’ டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்படும். விடைகளில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது தவறான கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தாலோ அதுகுறித்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் டி.என்.பி.எஸ்.சி.யில் முறையிடலாம். டி.என்.பி.எஸ்.சி.யின் வருடாந்திர காலஅட்டவணையின் படி, தேர்வு முடிவு அடுத்த மாதம் (செப்டம்பர்) வெளியிடப்பட வேண்டும். தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் தேர்வு முடிவு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் வெளியிடப்படலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி