இடைநிலை ஆசிரியர்கள் 23-இல் பேரணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2013

இடைநிலை ஆசிரியர்கள் 23-இல் பேரணி.

மத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னையில் செப்டம்பர் 23-ஆம் தேதி
பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த அமைப்பின் சார்பில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும், எம்.பில். மற்றும் எம்.எட். படித்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்த இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் இருந்து கோட்டையை நோக்கி பேரணியாகச் சென்று முதல்வரிடம் மனு அளிக்க உள்ளதாகதமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் இரா.தாஸ் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி