பிளஸ் 2 தனித்தேர்வு: தத்கால் திட்டம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2013

பிளஸ் 2 தனித்தேர்வு: தத்கால் திட்டம் அறிவிப்பு.

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, "தத்கால்" திட்டத்தின் கீழ், சிறப்பு கட்டணம் செலுத்தி, 16, 17 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.தேர்வுத்துறை அறிவிப்பு: விரைவில்
துவங்க உள்ள பிளஸ் 2 தனித்தேர்வை எழுத, தேர்வுத் துறை ஏற்கனவே அறிவித்த தேதிகளில் விண்ணப்பிக்காத தேர்வர்கள், "தத்கால்" திட்டத்தின் கீழ், வரும்,16, 17ம் தேதிகளில்,www.tndge.inஎன்ற இணையதளம்வழியாக, பதிவு செய்யலாம். இணையதளத்தில், புகைப்படத்தை,"அப்லோட்" செய்ய வேண்டும்.அதன் பின், புகைப்படத்துடன் கூடிய, பதிவு செய்த விண்ணப்பத்தையும், கட்டணம் செலுத்துவதற்கான செலானையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும். தேர்வு கட்டணத்துடன், சிறப்பு கட்டணமாக, கூடுதலாக, 1,000 ரூபாய் சேர்த்து செலுத்த வேண்டும். பதிவிறக்கம் செய்த விண்ணப்பம் மற்றும் கட்டணத்தை, 18ம் தேதி, சென்னை, எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் செலுத்த வேண்டும். இந்த வகை தேர்வர்களுக்கு, சென்னையில் மட்டும், தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி