குரூப்-2 தேர்வு: ஒரு லட்சம் பேர் விண்ணப்பம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2013

குரூப்-2 தேர்வு: ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்.

சார்- பதிவாளர், வணிக வரித்துறை உதவி அலுவலர் உள்ளிட்டபதவிகளை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., நடத்த உள்ள, குரூப் - 2 தேர்வை எழுத, பட்டதாரிகள், அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு
, அக்., 4ம் தேதியுடன் முடியும் நிலையில், இதுவரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.தமிழக அரசின், பல்வேறு துறைகளில், குரூப் - 2 நிலையில், 1,064 பணியிடங்கள் காலியாக உள்ளன. டிசம்பர், 1ம் தேதி, முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. தேர்வாணைய இணையதளம் வழியாக, கடந்த, 5ம் தேதி முதல், பட்டதாரிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.அக்., 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுவரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடைசி தேதி முடிவதற்குள், மேலும், மூன்று லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் எதிர்பார்க்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி