முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனத்துக்குப் முன் பதவி உயர்வு பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலைபட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என
தமிழ்நாடு உயர்நிலை,மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆர்.கே.சாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்காக சில மாதங்களுக்கு முன் ஆசிரியர்தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது.இத்தேர்வின் முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் அக்டோபர்23, 24-ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது.இந்நிலையில் பணியில் மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்று முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாகவோ,உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்களாகவோ பணி நியமணம் செய்வதற்கான பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகின்றன. ஆனால் இதற்கான கவுன்சிலிங் இதுவரை நடத்தப்படவில்லை.இதற்கிடையே பணியில் மூத்த பட்டதாரி ஆசிரியர் விருப்பத்தின் படி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக அல்லது உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறலாம். முதுநிலை பட்டதாரி ஆசிரியராகசென்று உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக வரக்கூடாது என முன்னாள் கல்வித்துறை இயக்குநர் தேவராஜ் உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவுக்கு தமிழ்நாடு உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கழகம் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற்றுள்ளது.எனவே,பணியில் மூத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாக பதவிஉயர்வு அளிக்க வேண்டும். அதன் பின்னர் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமண ஆணை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தி்க் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
By
முகமது, திருவள்ளூர்
தமிழ்நாடு உயர்நிலை,மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆர்.கே.சாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்காக சில மாதங்களுக்கு முன் ஆசிரியர்தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது.இத்தேர்வின் முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் அக்டோபர்23, 24-ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது.இந்நிலையில் பணியில் மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்று முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாகவோ,உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்களாகவோ பணி நியமணம் செய்வதற்கான பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகின்றன. ஆனால் இதற்கான கவுன்சிலிங் இதுவரை நடத்தப்படவில்லை.இதற்கிடையே பணியில் மூத்த பட்டதாரி ஆசிரியர் விருப்பத்தின் படி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக அல்லது உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறலாம். முதுநிலை பட்டதாரி ஆசிரியராகசென்று உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக வரக்கூடாது என முன்னாள் கல்வித்துறை இயக்குநர் தேவராஜ் உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவுக்கு தமிழ்நாடு உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கழகம் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற்றுள்ளது.எனவே,பணியில் மூத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாக பதவிஉயர்வு அளிக்க வேண்டும். அதன் பின்னர் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமண ஆணை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தி்க் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
By
முகமது, திருவள்ளூர்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி