10ம் வகுப்பு தேர்வு எழுதுவோர் பட்டியல் 27க்குள் அனுப்ப உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2013

10ம் வகுப்பு தேர்வு எழுதுவோர் பட்டியல் 27க்குள் அனுப்ப உத்தரவு.


இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பற்றிய பட்டியல்களை 27ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் தேர்வுத் துறைக்கு அனுப்ப வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.பத்தாம் வகுப்பு படிக்கும்
மாணவர்களுக்கு மார்ச் 26ம் தேதி பொதுத் தேர்வு தொடங்குகிறது. முன்னதாக ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தேர்வுத் துறைக்கு மாணவர்கள் பற்றிய விவரங்கள் பெறப்படும். இந்த ஆண்டு அந்த விவரங்கள் அனைத்தும், ஆன்லைன் மூலம் பெற தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 6500 அரசுப் பள்ளிகள், 3200 தனியார் பள்ளிகள் மூலம் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ளவர்களின் பெயர், போட்டோ, முகவரி, தந்தை பெயர், உள்ளிட்ட விவரங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்று, ஆன்லைன் மூலம் தேர்வுத் துறைக்கு அனுப்ப வேண்டும் என்று தேர்வுத் துறை ஏற்கெனவே அறிவித்து இருந்தது. அதன்படி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் பட்டியல்களை தயாரித்து வைத்துள்ளனர். தற்போது பிளஸ் 2 வகுப்பு பட்டியல் அனுப்பும் பணி நடப்பதால், பத்தாம் வகுப்பு மாணவர்கள் பட்டியல் 27ம் தேதி ஆன்லைனில் அனுப்பி வைக்கப்படும்.தேர்வுத் துறை அதைப் பெற்று, ஸ்கேன் செய்து ஒரு பட்டியல் தயார் செய்யும். பின்னர் அந்த பட்டியல் மீண்டும் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். அதில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்டி இருப்பார்கள்.

இதற்கான ஆய்வுக் கூட்டம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் சென்னையில் நடக்கிறது. பிளஸ் 2 வகுப்புக்கான திருத்திய பட்டியல்கள் மீண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ள குறைகளை தலைமை ஆசிரியர்கள் திருத்தம் செய்து அனுப்புவார்கள். இதற்கு பிறகு இறுதிப் பட்டியல் தயாரிப்பார்கள். பின்னர் மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம், இறுதி விவரம் ஆகியவை ஆன் லைன் மூலம் தேர்வுத் துறைக்கு வந்து சேரும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி