பிளஸ் 2 செய்முறை தேர்வுக்கு சென்னையில் 300 மையங்கள்: தேர்வுத்துறை முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 17, 2014

பிளஸ் 2 செய்முறை தேர்வுக்கு சென்னையில் 300 மையங்கள்: தேர்வுத்துறை முடிவு.


பிளஸ் 2 செய்முறை தேர்வுகளுக்காக சென்னையில் 300 மையங்கள் அமைக்க தேர்வுதுறை முடிவு செய்துள்ளது.பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வு மார்ச் 1ம் தேதி துவங்கி 27ம் தேதி முடிகிறது.
முன்னதாக, அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் மற்றும் 2ம் வாரங்களில் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தி லும் இந்த தேதி மாறுபடும்.சென்னையில் மொத்தம் உள்ள 406 மேல்நிலை பள்ளிகளில் அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் 30 ஆயிரம் மாணவமாணவியர் செய்முறை தேர்வில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்காக சென்னையில் 300 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.செய்முறை தேர்வில் 30 மதிப்பெண்கள் புறமதிப்பீட்டுக்கும், 20 மதிப் பெண்கள் அக மதிப்பீட் டுக்கும் தரப்பட்டுள்ளன.

இரண்டிலும் சேர்த்து 40 மதிப்பெண்கள் எடுத்தால்தான் செய்முறை தேர்வில் மாணவ மாணவியர் தேர்ச்சி பெற முடியும். அதாவது செய்முறை தேர்வில் 80% மதிப்பெண் பெறாவிட்டால் தேர்ச்சி பெற முடியாது. திருவள் ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இந்த ஆண்டு 35 ஆயிரம் மாணவ மாணவியர் செய்முறைத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி