அரசு விதியை மீறி விடுமுறை நாளில் இயங்கிய பள்ளிக்கு மெட்ரிக் கல்வித்துறை எச்சரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 17, 2014

அரசு விதியை மீறி விடுமுறை நாளில் இயங்கிய பள்ளிக்கு மெட்ரிக் கல்வித்துறை எச்சரிக்கை.


சேலையூரை தலைமையிடமாக கொண்டு தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதன் கிளை பள்ளி மாடம்பாக்கம், செம்பாக்கம், திருமலை நகரில்
செயல்படுகிறது. இந்த பள்ளிகளில் கடைசியாக நடந்த வேலை நாட்களில் 10, 12ம் வகுப்பு மாணவர்களும், அனைத்து ஆசிரியர்களும் விடுமுறை நாளான நேற்று கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும். மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம்அறிவித்தது.இதையடுத்து நேற்று காலை ஆசிரியர்களும், மாணவர்களும் பள்ளிக்கு வந்தனர். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். அப்போது, அனைத்து மாணவர்களையும் பள்ளியில் இருந்து வெளியேறும்படி நிர்வாகம் உத்தரவிட்டது.

இதையடுத்து அனைவரும் வெளியேறினர்.அரசு விதிப்படி அரசின் விடுமுறை நாட்களில் பள்ளி இயங்குவதற்கும், சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி பள்ளி நிர்வாகம் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு புகார் வந்தது. அதன்படி, ஆய்வாளர்கள் பள்ளியில் ஆய்வு செய்ய வருவதை அறிந்த பள்ளி நிர்வாகம் அவசர அவசரமாகமாணவர்களையும், ஆசிரியர்களையும் அனுப்பினர் என தெரிந்தது.இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் சுந்தர்ராஜனை கேட்டபோது, அரசு விதிப்படி விடுமுறை நாட்களில் பள்ளியோ, சிறப்பு வகுப்போ நடத்தக்கூடாது.

ஆனால் இந்த பள்ளி செயல்படுவதாக எங்களுக்கு புகார் வந்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும்படி உத்தரவிட்டோம். மேலும் ஆண்டு தொடக்கத்தில் அரசின் விதிமுறையை சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளோம். அதனையும் பள்ளி நிர்வாகம் மீறியுள்ளது.இந்த விசாரணை அறிக்கையை கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப உள்ளோம். அவரது உத்தரவின்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி