காலி பணியிடங்களால் கல்வி தரம் பாதிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2014

காலி பணியிடங்களால் கல்வி தரம் பாதிப்பு.


மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில், பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால்,மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்வித் தரம், பாதிக்கப்படும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், 9 அரசு சிறப்பு பள்ளிகள்; வாய்பேச முடியாத, காது கேளாதோருக்கான, 9 சிறப்பு பள்ளிகள்; கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, ஒரு சிறப்பு பள்ளி; மனவளர்ச்சி குன்றியோருக்கு, ஒரு சிறப்பு பள்ளி என, மொத்தம், 20 சிறப்பு பள்ளிகள் உள்ளன. இவற்றில், 150 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள், மூன்று ஆண்டுகளாக, காலியாக உள்ளன. ஆசிரியர் அல்லாத அலுவலக பணியாளர் உள்ளிட்ட, 120 பணியிடங்களும், காலியாக உள்ளன. குறிப்பாக, சென்னை, பூந்தமல்லி அரசு சிறப்பு பள்ளியில் மட்டும், 16 சிறப்பாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பூந்தமல்லியில் உள்ள, பார்வையற்றோருக்கான வட்டார பிரெய்லி அச்சகத்தில், 21 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மூன்று ஆண்டுகளாக, அச்சகம் செயல்படுவதில் சிக்கல் உள்ளது. பார்வையற்றோருக்கான பிரெய்லி புத்தகங்களை, தயாரிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவர், தங்கம் கூறுகையில், ""இப்பிரச்னையால், மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்வி மட்டுமின்றி, எதிர்காலமும் பாதிக்கப்படும் நிலை, உள்ளது. எனவே, தமிழக அரசு, காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி