ப்ளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 10க்குள் முடிக்க உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2014

ப்ளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 10க்குள் முடிக்க உத்தரவு.


ப்ளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகளை, ஏப்ரல், 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும், என்று தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், ப்ளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 3ம் தேதி தொடங்கியது. எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வெழுதியுள்ளனர். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட தேர்வுகள் முடிவடைந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.கடந்த ஆண்டுகளில், மதிப்பீடு செய்யும் முன், "டம்மி' போடும் பணிகள், ஒரு வாரத்துக்கும் மேல் நடக்கும். நடப்பு கல்வியாண்டில், பார்கோடு எண், ஃபோட்டோவுடன் கூடிய விடைத்தாள் உள்ளிட்ட மாற்றங்களால், நேரடியாக மதிப்பீடு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.

ப்ளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகளை, ஏப்ரல், 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும், என்று தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், அதற்கான பயிற்சி வகுப்புகள் உள்ளிட்டவைகளுக்கு செல்ல வேண்டியிருக்கும். இதனால், முன்கூட்டியே விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகளை முடிக்கும் வகையில், முடுக்கிவிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும், பாடவாரியாக உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, முன்கூட்டியே விடைத்தாள் எண்ணிக்கையும் திட்டமிடப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதனால், குறிப்பிட்ட தேதிக்குள் எளிதாக விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகள் முடிவடையும், என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி