உலகம் முழுவதும் 2.5 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க புதிய திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2014

உலகம் முழுவதும் 2.5 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க புதிய திட்டம்.


பெருகி வரும் மக்கள்தொகையின் விளைவாக அடுத்த 20 ஆண்டுகளில் உலக அளவில் சுமார் 7 மில்லியன் ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள் எனமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐ.நா.வின் அமைப்பான யுனெஸ்கோ சமீபத்தில் வெளியிட்ட தனது அறிக்கையில், உலகம் முழுவதும் 57 மில்லியன் ஆரம்ப பள்ளி குழந்தைகள் படிப்பை இடைநிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.

ஆசிரியர்களின் திறமையின்மையும் இதற்கு காரணமாக உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, வகுப்பறை கல்வி பயிற்றுவிக்கும் தரத்தை உயர்த்துவதற்காக அடுத்த 10 ஆண்டுகளில் 2,50,000 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியரின் சர்வதேச கல்வி நிறுவனம் ஒன்று துபாயைச் சேர்ந்த துபாய் கேர் அமைப்புடன் கையெழுத்திட்டுள்ளது. இரண்டாவது பன்னாட்டு கல்வி மற்றும் திறன்களின் மாநாடு துபாயில் நடைபெற்றது. அதில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி