உயர் கல்வித் துறை உத்தரவைத் தொடர்ந்து அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நடத்தப்பட இருந்த பேராசிரியர் பணியிடத்துக்கான நேர்முகத் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் நிலையில், சென்னையைச் சேர்ந்த பச்சையப்பன் அறக்கட்டளை அதன் கீழ் இயங்கி வரும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 123 உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புதவற்கான நேர்முகத் தேர்வை வரும் 26,27,28 தேதிகளில் நடத்தத் திட்டமிட்டிருந்தது. இது தொடர்பாக "தினமணி'யில் திங்கள்கிழமை (மார்ச் 17) செய்தி வெளியானது.இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், சென்னை பல்கலைக்கழகம், பச்சையப்பன் கல்லூரி உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உயர் கல்வித் துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், உயர் கல்வித்துறை மறு அறிவிப்பை வெளியிடும் வரை, பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை கல்வி நிறுவனங்கள் நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பச்சையப்பா அறக்கட்டளை செயலர் பி. ராஜகோபாலன் கூறியது:உயர் கல்வித்துறை உத்தரவைத் தொடர்ந்து, பேராசிரியர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வை அறக்கட்டளை நிறுத்திவைத்துள்ளது.மறு அறிவிப்பு வந்த பிறகே நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி