பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு "வழிகாட்டி' நிகழ்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2014

பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு "வழிகாட்டி' நிகழ்ச்சி


பொதுத்தேர்வை முடித்துள்ள, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மாவட்டந்தோறும், "வழிகாட்டி' நிகழ்ச்சியை நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுஉள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு, மே, 9ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, மே 23ம் தேதியும் வெளியாகிறது.

பத்தாம் வகுப்பு மாணவர்கள், பிளஸ் 1 வகுப்பில், எந்தெந்த, "குரூப்'பை தேர்வு செய்யலாம்; எந்த, "குரூப்'பை தேர்வு செய்தால், என்னென்ன உயர்கல்வி படிக்க முடியும் என்பது குறித்து, "வழிகாட்டி' நிகழ்ச்சியில் விளக்கிக் கூற, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து விளக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி, தேர்வு முடிவு வெளியானதற்குப் பின், மாவட்டந்தோறும் நடக்கும் என, கல்வித்துறை வட்டாரம், நேற்று தெரிவித்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி