மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2014

மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வா?


தனியார் பள்ளிகள், மாணவர் சேர்க்கை நடத்திட, அவர்களுக்கு, நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது.
மீறி, நுழைவுத் தேர்வு நடத்தினால், சம்பந்தபட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில்(ஆர்.டி.இ.,), பள்ளிகளுக்கான விதிமுறைகள் குறித்து, பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.இந்த விதிமுறைகளை, பள்ளிகள் கடைபிடிப்பது இல்லை. வழக்கமான பாணியில் தான், தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றை, அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை."ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரை, எந்தக் காரணம் கொண்டும், தோல்வி அடையச் செய்யக்கூடாது; மாணவர் சேர்க்கைக்கு, நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது' என்பது முக்கியமான விதிகள். ஆனால், இதை, இரண்டையும், பள்ளிகள் கடைபிடிப்பது இல்லை. தமிழகத்தில், பல முன்னணி தனியார் பள்ளிகளில், இப்போதும், எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பு சேர்க்கைக்கு, நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. வேறு வகுப்புகளில் சேர்த்தாலும், தேர்வு நடத்தி தான், "சீட்'தருகின்றனர். இதேபோல், படிப்பில், மிகவும் பின் தங்கும் குழந்தைகளை, "பெயில்' செய்கின்றனர்.

இந்த விவகாரமும், வெளியில் தெரிவது இல்லை.இந்நிலையில், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம், "மாணவர் சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது. மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்துள்ளது.வெற்று அறிவிப்புடன் நிற்காமல், அறிவிப்பு, அமல்படுத்தப்படுகிறதா என்பதை, நேரடியாக, களத்திற்கு சென்று ஆய்வு செய்து, விதிமுறையை மீறும் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்க, துறை முன்வர வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

4 comments:

  1. துணிச்சலாக நாமக்கல் மாவட்டதில் உள்ள பள்ளிகள் இதை செய்கின்றன.பகல் கொள்ளையர்கள் இவர்களை வன்கொடுமை, சட்டதின் கீழ் கைது செய்யவேண்டும்

    ReplyDelete
  2. இவைகள் கல்வி நிறுவனங்கள் இல்லை வியாபார நிறுவனங்கள்.

    ReplyDelete
    Replies
    1. unkalin karuthu 100/100 unmaiyanathu thaan... nanri

      Delete
    2. ivargal anniyargal naam ivargalai aatharikaamal irrunthaal thaamagave muduvizhaa nadakkum. aanal ARASU uzhiyarum matrum vasathipadaithavarum aatharikindranar avargal kollai adikindranar.
      maatraaga ARASU palligalai aatharika makkal ninaipathillai aagave ithu thodarum.............

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி