சிறுபானமையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் இலவச கல்வி சேர்க்கைக்கான தேதி மே 31வரை நீட்டிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2014

சிறுபானமையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் இலவச கல்வி சேர்க்கைக்கான தேதி மே 31வரை நீட்டிப்பு.


இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் சேர்க்கைக்கான தேதி வரும் மே மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் வெளியிட்டுள்ள அறிக்கை.

தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிமுறைகளின்படி, சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் வரும் கல்வி ஆண்டில் சேர்க்கை செய்யப்பட உள்ள மொத்த இடங்களில் குறைந்தபட்சம் 25 சதவீத இடங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கான தேதி மே 18 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.மாணவர்களின் நலன் கருதி வரும் மே மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்த தகவல்கள் அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி