பி.எஸ்.என்.எல்., கட்டணம் உயர்வு: முன் தேதியிட்டு அமலாகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2014

பி.எஸ்.என்.எல்., கட்டணம் உயர்வு: முன் தேதியிட்டு அமலாகிறது.


பி.எஸ்.என்.எல்., தொலைபேசி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மே, 1ம் தேதி முதல்,முன் தேதியிட்டு, இக்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் மக்கள் தொடர்பு பிரிவு துணை பொது மேலாளர், மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், பொதுத்தொலைபேசிகள் (பி.சி.ஓ.,), மற்றும் சொந்த தொலைபேசிகளில், ஒரு அழைப்புக்கான காலம், 60 வினாடிகளிலிருந்து, 45 வினாடிகளாகக் குறைக்கப்படுகிறது. ஒரு அழைப்புக்கான இந்த கால குறைப்பு, பி.எஸ்.என்.எல்., போனில் இருந்து, பி.எஸ்.என்.எல்., போனுக்கு செய்யப்படும் அழைப்புக்கு மட்டும் பொருந்தும். பிற,'நெட்வொர்க்' போன்களுக்கு செய்யப்படும், ஒரு அழைப்புக்கான காலம், 45 வினாடிகள் என, ஏற்கனவே நிர்ணயித்திருப்பது தொடரும். பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 'பிராட்பேண்ட்' சேவையில், பி.பி.ஜி., கோம்போ 2799; பி.பி.ஜி.,கோம்போ 1445; பி.பி.ஜி., கோம்போ 1275 ஆகிய எல்லையில்லா திட்டங்களைஅறிவித்துள்ளது. மாத கட்டணம் முதல், ஆண்டு கட்டணம் வரை என, திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி