அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பதவி உயர்வுக்கு முன்பே மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவதால்,இடைநிலை ஆசிரியர்கள் இடம்மாறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 6 முதல் 8 ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.அரசு உத்தரவுப்படி, 2003க்கு பின், இடைநிலை ஆசிரியர் ஓய்வு பெற்ற பணியிடங்களில், பட்டதாரி ஆசிரியர்கள்நியமிக்கப்படுகின்றனர். இதனால், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாகமாற்றப்பட்டு உள்ளன.இந்நிலையில், ஜூன் 27 ல் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உள்ள இடைநிலைஆசிரியர்களுக்கு,மாவட்டத்திற்குள் மாறுதலும்; ஜூன் 28 ல் வெளிமாவட்டத்திற்கான மாறுதலும் நடக்க உள்ளது. இடைநிலை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர் ஆவதற்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூன் 28ல் நடக்கிறது. பதவி உயர்வுக்கு முன், இடமாறுதல் கலந்தாய்வு நடப்பதால், இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஏற்படாது.
ஆசிரியர்கள் கூறுகை யில்,'பட்டதாரி பதவி உயர்வுக்கு பின்பே காலிப்பணியிடங்கள் ஏற்படும். பதவி உயர்வுக்கு முன் இடமாறுதல்கலந்தாய்வு நடப்பதால், காலிப்பணியிடங்கள் ஏற்படாது' என்றனர்.
June 10 to 13. Counseling ல் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்ற விபரம் யாரேனும் அறிவீர்களா? அதனால் ஏதேனும் பயன் இருந்ததா TRB க்கு.
ReplyDeletetet pass ex servicemen quota canditaes plz contact this no 9942424565
ReplyDelete