பணி மாறுதல் கவுன்சலிங்கில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு ஓ.டி வழங்கப்படுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2014

பணி மாறுதல் கவுன்சலிங்கில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு ஓ.டி வழங்கப்படுமா?


அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் பணியிட மாறுதல் கவுன்சலிங் நடத்தி, ஆசிரியர்கள் விரும்பும் இடங்களுக்கு மாறுதல் உத்தரவுகள் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை மற்றும் படிக்கும் மாணவர்களின் வருகை என்ற அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பணி நிரவலும் வழங்கப்படுகிறது.அதன்படி இந்த ஆண்டுக்கான கவுன்சலிங் நேற்று தொடங்கியது. நேற்றைய கவுன்சலிங்கில் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிட மாறுதல் மற்றும் பதவிஉயர்வு நடந்தது. இன்று நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. 18ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் மற்றும் பணியிட மாற்ற கவுன்சலிங் நடக்கிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும் நேற்று வட்டார வள மைய ஆசிரியர்களுக்கான பணி நிரவல் மற்றும் கவுன்சலிங் நடந்தது. 18ம் தேதி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்படுகிறது. 19ம் தேதி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், 23ம் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பணி நிரவல் மற்றும் கவுன்சலிங் நடக்கிறது. 24ம் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட் டம் பணி மாறுதல் வழங்கும் கவுன்சலிங் நடக்கிறது.

26ம் தேதி பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கவுன்சலிங் நடக்கிறது.18ம் தேதி நடக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சலிங்கில் 2013ம் ஆ ண்டு முன்னுரிமை பட்டியல் பின்பற்றப்படும் என்று தெரிகிறது. 2014 பிப்ரவரியில் ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் இருந்தாலும் 2013 பட்டியலின்படியே பதவி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் தகுதி வாய்ந்தவர்கள் இல்லை என்றால் 2014 பேனல் பட்டியலில் இருந்து பதவி உயர்வு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.பணி மாறுதல் கவுன்சலிங்கில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு அந்த நாளில் ஓ.டி வழங்கப்படும் என்று ஆசிரியர்கள் இடையே செய்தி பரவியுள் ளது. ஆனால் ஒரே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கவுன்சலிங்கில் கலந்து கொண்டால் எப்படி பள்ளியை நடத்துவது என்று பள்ளிக் கல்வித்துறை தரப்பில் இருந்து எந்த தகவலும் இல்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி