பொறியியல் கல்லூரி ஆசிரியர் நியமன வயதை 35 ஆக நிர்ணயிப்பது ஏன்?' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2014

பொறியியல் கல்லூரி ஆசிரியர் நியமன வயதை 35 ஆக நிர்ணயிப்பது ஏன்?'


''கலை கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்கு, 57வயது என இருக்கும்போது, பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு மட்டும், 35 வயது என, நிர்ணயிப்பது ஏன்?''என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, அவர்வெளியிட்டுள்ள அறிக்கை:சட்டசபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் வெளியிடும் அறிவிப்புகள் மீது, விவாதம் நடத்தக் கூடாது என, சொல்கின்றனர்.அதே நேரத்தில், 110வது விதியின் கீழ், வெளியாகும் அறிவிப்புகளில், யார் மீதும் குற்றம் குறையும் சொல்லக் கூடாது என்றும் விதியில் உள்ளது.தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பணிகளுக்கு,வயது வரம்பு, 57 ஆக இருக்கிறது. இந்நிலையில், பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு மட்டும், வயது வரம்பை, 35 ஆக எப்படி நிர்ணயிக்க முடியும்?இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.

1 comment:

  1. TNTET – ன் தற்போதைய குளறுபடி: HEART BREAKING NEWS
    .05 இலவச வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
    49.25 = 4.93 இது தவறு
    49.75 = 4.98 இது தவறு
    TRB பயன்படுத்தியுள்ள மென்பொருள் தவறாகக் கணக்கிடுகின்றது. புள்ளிக்குப் பிறகு 5 அல்லது அதற்கு மேற்பட்ட எண் வரும்பொழுது ஒரு தசம மதிப்பை AUTOMATIC –ஆகக்கூட்டிக்கொள்கின்றது. எடுத்துக்காட்டாக PLUS TWO மதிப்பெண் 45.17 யை 45.2 ஆகக் கணக்கிடுகின்றது.......இதாவது பரவாயில்லை 49.25 யை 49.3 ஆகக் கணக்கிடுகின்றது. (.05 இலவசம் !)மேலும் TNTET தேர்வில் 89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் 35.59 ( 89 * .6 = 35.59) மட்டுமே வழங்கப்படவேண்டும் ஆனால் 35.6 ஆகக் கணக்கிடுகின்றது. .01 மதிப்பெண் வித்தியாசம் உங்கள் வாழ்கையை மாற்றிவிடும்.

    நீங்களே உங்கள் நண்பர்களின் பதிவு எண்களை சோதித்துக் கொள்ளுங்கள்…நான் மேற்குறிப்பிட்ட குறை உடைய எண்களை கொடுத்துள்ளேன் 13TE65200722
    13TE63204905
    மேலும் விவரங்களுக்கு
    www.facebook.com/profile.php?id=100004403297597

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி