கணிதப் பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கான மூன்று நாள் சிறப்பு பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2014

கணிதப் பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கான மூன்று நாள் சிறப்பு பயிற்சி.


விருதுநகர்: மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 9மற்றும் 10ம் வகுப்பில் கணிதப் பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கான மூன்று நாள்சிறப்பு பயிற்சி, ஆகஸ்ட் 21 முதல் நடைபெறுகிறது.

அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் விருதுநகர் ஒன்றிய பள்ளி ஆசிரியர்களுக்கு விருதுநகர் சுப்பையாநாடார் அரசு மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவி.,கல்விமாவட்டத்தில் சிவகாசி, வெம்பகோட்டை ஒன்றிய பள்ளி ஆசிரியர்களுக்கு ராஜபாளையம் ஏ.கே.டி.ஆர்.,மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சி நடக்கிறது.அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட மாவட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வழிகாட்டுதலில், நவீன கணித உபகரணங்களை பயன்படுத்தி அதன்மூலம் மாணவர்களுக்கு தரமாக கற்பிப்பது குறித்து, ஏற்கனவே மாநில அளவில் பயிற்சி பெற்றவர்கள் மூலம், பயிற்சியளிக்கப்படுகிறது. இதில் 223 ஆசிரியர்கள் பங்கேற்பர்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி