டிப்ளமோ நர்சிங் படிப்பில் காலி இடம் இல்லைஇன்று மருத்துவம் சார் படிப்பு கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2014

டிப்ளமோ நர்சிங் படிப்பில் காலி இடம் இல்லைஇன்று மருத்துவம் சார் படிப்பு கலந்தாய்வு

டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான கலந்தாய்வு நேற்று முடிந்தது. எல்லா இடங்களும் நிரம்பி விட்டதாக, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இன்று, மருத்துவம் சார் பட்டப் படிப்புக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு துவங்குகிறது.

தமிழகத்தில், 23 அரசு நர்சிங் கல்லுாரிகளில், இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,000 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு, 8,101 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் 15ம் தேதி துவங்கியது.நேற்று, நான்காவது நாளாகவும் கலந்தாய்வு நீடித்தது. நேற்று மட்டும், 514 பேர் இட ஒதுக்கீடு பெற்றனர். நேற்று மாலை, கலந்தாய்வு முடிந்த நிலையில், மொத்தம் இருந்த 2,000 இடங்களும் நிரம்பி விட்டன; காலி இடங்கள் ஏதும் இல்லை என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் இன்று துவங்குகிறது. இந்த கலந்தாய்வு, 26ம் தேதி வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. பணி நியமன ஆணைக்காக காத்திருக்கும் என் இனிய நண்பர்களுக்கு மட்டும் காலை வணக்கம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி