தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியலை வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 19, 2014

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியலை வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம்.


தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியலைவெளியிடக் கோரி, வரும் 29ம் தேதி, மாநிலம் முழுவதும், முதன்மைக் கல்விஅலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் மாநில தலைவர், நடராசன் அறிவித்ததாவது: நடப்பு கல்வி ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை, பட்டியல் வெளியாகவில்லை; இந்த பட்டியலை விரைந்து வெளியிட வேண்டும்.நூறு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதற்கு, தலைமை ஆசிரியர் நியமனம் இன்னும் நடக்கவில்லை. நேர்மையாக, வெளிப்படையான முறையில், கலந்தாய்வு மூலம் தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 29ம் தேதி மாலை, 5:30 மணிக்கு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி