பாரதிக்கும் நாடு முழுவதும் பிறந்த நாள் விழா: மத்திய அமைச்சர் ஸ்மிருதி உறுதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2014

பாரதிக்கும் நாடு முழுவதும் பிறந்த நாள் விழா: மத்திய அமைச்சர் ஸ்மிருதி உறுதி

'திருவள்ளுவரை தொடர்ந்து, பாரதியார் பிறந்த நாளையும், நாடு முழுவதும் அரசின் சார்பில் கொண்டாட, நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், 'திருக்குறள் மொழியாக்கம் செய்யப்பட்டு, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படும்' என்றும் அறிவித்துள்ளது.உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.பி.,யான தருண் விஜய், நேற்று முன்தினம், ராஜ்யசபாவில் பேசும் போது, 'திருவள்ளுவர் பிறந்த நாளை, நாடு முழுவதும் கொண்டாட, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை வைத்தார். அவர் பேசி முடித்த தும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுந்து, 'தருண் விஜய்யின் கோரிக்கை ஏற்கப்படுகிறது' என, சபையிலேயே வாக்குறுதி அளித்தார். இதையடுத்து, அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு நன்றி தெரிவிக்க, அவரின் அமைச்சகத்திற்கு, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தருண் விஜய் எம்.பி., ஆகியோர் வந்தனர். அவர்களுடன், டில்லி தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த, நிர்வாகிகள் சிலரும் வந்திருந்தனர். அனைவரும், அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, மலர்கொத்து அளித்து, தங்களது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

பின், நிருபர்களிடம் பேசிய, அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது: திருவள்ளுவர் பிறந்த நாளை, அரசு சார்பில் கொண்டாடுவது என்பது பெருமைக்குரியது. நாடு முழுவதும், திருவள்ளுவர் பிறந்த நாளை கொண்டாட தேவையான, அனைத்து நடவடிக்கைகளையும், மத்திய அரசு மேற்கொள்ளும். திருக்குறளை, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில், மொழி பெயர்த்து, அவற்றை நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். இதேபோல, தமிழகத்தைச் சேர்ந்தவரும், மகாகவியாக அறியப்பட்டவருமான, பாரதியாரின் பிறந்த நாளையும், மத்திய அரசின் சார்பில், தேசிய விழாவாக, நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளையும், மத்திய அரசு எடுக்கும். இவ்வாறு, ஸ்மிருதி இரானி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி