உயர் நீதிமன்றங்களில் காலியாகவுள்ள நேர்முக உதவியாளர், கணினி இயக்குபவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணலும், சான்றிதழ் சரிபார்ப்பும் அடுத்த மாதம் நடைபெறுகின்றன.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
உயர் நீதிமன்றத்தில் நீதிபதிக்கான நேர்முக உதவியாளர், உதவியாளர், கணினி இயக்குபவர், தட்டச்சர் ஆகிய பிரிவுகளில் 268 காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கு கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வினை 27 ஆயிரத்து 983 பேர் எழுதினர்.எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து நடத்தப்பட்ட திறனறிவுத் தேர்வில் 3 ஆயிரத்து 631 பேர் பங்கேற்றனர். அதிலிருந்து நேர்முகத் தேர்வுக்கு 221 பேர் அனுமதிக்கப்பட்டனர். இந்தப் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய்) வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புஜனவரி 5-ஆம் தேதியும், நேர்காணல் தேர்வு ஜனவரி 6 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறும். இது, நேர்முக உதவியாளர் உள்ளிட்ட 4 பணியிடங்களுக்கு மட்டும் பொருந்தும்.
தட்டச்சர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தனியாக வெளியிடப்படும் என்று தேர்வாணையம்தெரிவித்துள்ளது.
LP (Civil) 29245/2014
ReplyDeleteSTATUS PENDING
Cause Title
V. LAVANYA & ORS.
Vs.
THE STATE OF TAMIL NADU & ORS.
Advocate Details
Pet. Adv. MR. T. HARISH KUMAR
Res. Adv. Not Available
High Court Details
Appealed Against Case No WA 1031/14
High Court Name HIGH COURT OF MADRAS
Subject Category
SERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT
Listing Details
Next Date of Listing 16/01/2015
What about supreme court case????
ReplyDelete