குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த திட்டம்: அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2015

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த திட்டம்: அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பேட்டி



தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அனைவருக்கும் கல்வி திட்டம் 1-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை உள்ளமாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்பிப்பதே ஆகும். இந்த திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். ஒவ்வொரு அரசு பள்ளியிலும் 1-வது வகுப்பு முதல் 4-வது வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு செயல்வழி கற்றல் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முறையில் மாணவர்களுக்கு அட்டைகளில் படம் காண்பிக்கப்பட்டும், அவற்றை கொண்டும், நம்பர் அட்டைகளை கொண்டும் அவர்கள் நன்றாக படிக்கிறார்கள். எழுத்துக்களை கூட்டி எளிமையாக படிக்கிறார்கள். வார்த்தைகள் நன்றாக அமைத்து காண்பிக்கிறார்கள். அவர்களுக்கு கணிதம் நல்ல முறையில் தெரிகிறது. பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு செயல்வழி முறையில் சரியாக கற்பிக்கிறார்களா? என்பதை வட்டார வள மைய ஆசிரியர்கள் மாதம்தோறும் சென்று ஆய்வு செய்கிறார்கள்.மேலும் மாணவ-மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் கட்டமைப்பு வசதி உள்ளதா? என்றும் அந்த ஆசிரியர்கள் பார்க்கிறார்கள். கழிப்பிட வசதி அல்லது நாற்காலிகள், பெஞ்சுகள் இல்லை என்று தெரிந்தால் அந்த வசதியை ஏற்படுத்திக்கொடுக்க கல்வித்துறை மூலம் ஏற்பாடு செய்கிறார்கள். பள்ளிகளில் சாதாரண மாணவர்களுடன் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களும் படிக்கிறார்கள். மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு எப்படி கற்பிக்க வேண்டும் என்பதை சாதாரண ஆசிரியர்களுக்கு, அதற்கான நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு பயிற்சி அளிக்கிறோம். பயிற்சி பெற்றவர்கள் பயிற்சி பெறாத ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.இந்த வருடம் மத்திய அரசிடம் 3 ஆயிரத்து 500 கோடி கேட்டுள்ளோம். எப்படியும் 2 ஆயிரம் கோடியை தாண்டி கிடைக்கும். விரைவில் நிதி ஒதுக்கப்படும். இந்த வருடம் அனுப்பிய திட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்கும் திட்டத்திற்கும் சேர்ந்து நிதி கேட்டுள்ளோம். பெண்ணின் திருமண வயது 18. அந்த வயதுக்கு குறைவாக பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதை குழந்தை திருமணம் என்று அழைக்கிறோம். குழந்தை திருமணத்தை தவிர்க்க திட்டமிட்டுள்ளோம்.6-வது முதல் 8-வது வரை படிக்கும் மாணவ-மாணவிகளிடம் இந்த குழந்தை திருமணம் பற்றி எடுத்துக்கூற உள்ளோம். கூடிய மட்டும் அந்த குழந்தைகளுக்கு திருமணம் பேசினால் உடனே அதை தடுக்கும் வகையில் அந்த குழந்தைகளின் பெற்றோரிடம் ஆசிரியர்கள் பேசுவார்கள். மாணவிகளும் தங்களுக்கு திருமணம் பேசினால் பெற்றோரிடம் நைசாக பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தப்பார்க்கவேண்டும். இல்லையென்றால் ஆசிரியரிடம் தகவல் தெரிவியுங்கள்.

குழந்தை திருமணத்தால் வரும் தீமைகள் பற்றி பெற்றோர்களுக்கும் எடுத்துக்கூறி குழந்தை திருமணத்தை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.மத்திய அரசு குழந்தை திருமணத்தை தடுக்க நாங்கள் கொடுத்துள்ள திட்டத்திற்கு நிதி தந்தால் அந்த திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றுவோம். உயர்நிலைப்பள்ளிகளிலும், மேல்நிலைப்பள்ளிகளிலும் அங்கு 6-வது வகுப்பு முதல்8-வது வகுப்பு வரை இருக்கும். அதனால் அனைத்து அரசு உயர்நிலைப்பள்ளிகளிலும்,அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் குழந்தைகள் திருமணத்தை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கினால் மாவட்டங்களில் வேனில் பள்ளிக்கூடங்களுக்கு சென்று மாணவர்களின் மன அழுத்தத்தைபோக்கும் குழு மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். விரைவில் திட்ட அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன். முதலில் விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் அமல்படுத்துவோம்.

இவ்வாறு பூஜா குல்கர்னி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி