விடைத்தாள் திருத்தும் மையங்களில் வசதி...தேவை ..! மதுரையில் நிரந்தர மையம் அமையுமா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2015

விடைத்தாள் திருத்தும் மையங்களில் வசதி...தேவை ..! மதுரையில் நிரந்தர மையம் அமையுமா


மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு நிரந்தர மையங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வுகள் முடிந்த பின் அரசு உதவி பெறும் அல்லது தனியார் பள்ளிகளில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்படுகின்றன. மார்ச் 5ல் பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது. மொழி பாடம்முடிந்தவுடன் திருத்தும் பணி (கேம்ப்) துவங்கிவிடும்.

குறைந்தபட்சம் மூன்று மையங்கள் அமைக்கப்படும்.கடந்தாண்டு அமைக்கப்பட்ட மையங்களில் பெரும்பாலும் விளக்கு, மின்விசிறி உட்பட அடிப்படை வசதி இல்லாததால், திருத்தும் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.அவர்கள் கூறியதாவது:இதுபோன்ற காரணத்தால் கடந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாளில் மதிப்பெண் வித்தியாசம் ஏற்பட்டது. இதுதொடர்பாக 300 ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விளக்கம் கேட்டது. இந்தாண்டுமுதல் இதுபோன்ற பிரச்னையை தவிர்க்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி