திருவாடானை : உதவி கல்வி அலுவலகங்களில், அலுவலர்கள் பற்றாக்குறையால் அப்பணியை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.1993-94 ஆண்டு முதல் ஆசிரியர்களின் டி.பி.எப்.(பொது வருங்கால வைப்பு நிதி) கணக்குகள் சென்னையில் உள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பப் படாமல் உள்ளது.
உடனடியாக அதை அனுப்பும்படி அனைத்து உதவிக்கல்வி அலுவலகத்திற்கும் உத்தரவு வந்துள்ளது. இதனால், கடந்த ஒரு மாதமாக திருவாடானை ஒன்றியத்தில் உள்ள பல பள்ளிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து திருவாடானை உதவி கல்வி அலுவலர்கள் கூறுகையில், "தமிழகத்தில் அனைத்து உதவிக்கல்வி அலுவலகங்களிலும் இப்பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருவாடானை உதவிக்கல்வி அலுவலகத்தில் 2 உதவிக்கல்வி அலுவலர்கள், ஒரு சூப்பிரெண்ட், 3 உதவியாளர்கள், ஒரு ஆர்.சி. (ரிக்கார்டு கிளார்க்) ஒரு டைப்பிஸ்ட், 2 ஓ.ஏ. பணியாற்ற வேண்டும். தற்போது 2 உதவிக்கல்வி அலுவலர்கள், ஒரு உதவியாளர், ஒரு ஆர்.சி. மட்டும் பணியில் உள்ளனர். வேறு வழியில்லாமல் இப்பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டியதுள்ளது,' என்றனர். இதனால் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி