அரசு தொழில்நுட்ப தேர்வு முடிவுகள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2015

அரசு தொழில்நுட்ப தேர்வு முடிவுகள் வெளியீடு


கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற அரசு தொழில்நுட்பத் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் ஏப்ரல் 27முதல் 29-ம் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் வழங்கப்படும்.இதுதொடர்பாக அரசுத்தேர்வு கள் இயக்குநர் கே.தேவராஜன் நேற்று வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசுத் தேர்வுகள் துறையால் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் நடத்தப்பட்ட ஓவியம், இந்திய இசை, நடனம், தையல் பிரிவு, விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்படுகின்றன. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மேல்நிலை, கீழ்நிலை சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஏப்ரல் 27 முதல் முதல் 29-ம் தேதி வரை விநியோகிக்கப்படும்.

தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலகத்துக்கு நேரில் சென்று சான்றிதழ்களைப்பெற்றுக்கொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், தோல்வியுற்றவர்களுக்குக் குறிப்பாணையும் வழங்கப்படும். சான்றிதழ்கள் இருப்பிட முகவரிக்கு அனுப்பப்பட மாட்டாது.

இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி