பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. இம்முறை தேர்ச்சி சதவீதம் உயருமா, அரசு பள்ளிகள் மாநில முதலிடத்துக்கு வந்து ஆறுதல் தருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.சமச்சீர்க் கல்வி அமலுக்கு வந்த பின், 10ம் வகுப்புக்கான நான்காவது பொதுத்தேர்வு, மார்ச், 19ல் துவங்கி, ஏப்ரல், 10ம் தேதி முடிந்தது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த, 10.70 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகளை தேர்வு துறை இயக்குனர் தேவராஜன் இன்று காலை, 10:00 மணிக்கு வெளியிடுகிறார். கடந்த ஆண்டு 10ம் வகுப்புத் தேர்வில், 90.70 சதவீத பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறையுமா அல்லது அதிகரிக்குமா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மாநில 'ரேங்க்' எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறையுமா அல்லது அதிகரிக்குமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு, அறிவியலில், 69,560; சமூக அறிவியலில், 26,554 பேர், 'சென்டம்' வாங்கினர்.
இந்த ஆண்டு அனைத்து தேர்வுகளும் எளிதாக இருந்ததாக, மாணவ, மாணவியர் தெரிவித்ததால், 'சென்டம்' எண்ணிக்கை அதிகரிக்கும் என, தெரிகிறது. பிளஸ் 2 தேர்வில் மாநில மற்றும் மாவட்ட, 'ரேங்க்' பெறாத அரசுப் பள்ளிகள், 10ம் வகுப்பிலாவது அதிக இடங்களை பெற்று, கல்வித்துறை ஆறுதல் அளிக்குமா என, அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.
May 21, 2015
Home
kalviseithi
இன்று 10ம் வகுப்பு 'ரிசல்ட்': அரசு பள்ளிகள் சாதிக்குமா?
இன்று 10ம் வகுப்பு 'ரிசல்ட்': அரசு பள்ளிகள் சாதிக்குமா?
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி