தலைமைச் செயலகத்துக்கு இன்று வருகிறார் ஜெயலலிதா: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2015

தலைமைச் செயலகத்துக்கு இன்று வருகிறார் ஜெயலலிதா: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?


முதல்வர் ஜெயலலிதா, இன்று பிற்பகல் தலைமைச் செயல கத்துக்கு வந்து பெண்களை மகிழ்ச்சிக் குள்ளாக்கும் மது விலக்கு தெடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க் கப்படுகிறது.சென்னை பல்கலைக்கழக நூற் றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில்தமிழக முதல் வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்றார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
பதவியேற்பு விழா முடிந்ததும், தலைமைச் செயலகத்துக்கு ஜெயலலிதா வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விழாவை 25 நிமிடங்களில் முடித்துவிட்டு உடனடியாக அவர் வீடு திரும்பிவிட்டார்.

அமைச்சர்கள் அனைவரும் ஜெயலலிதாவை வீட்டில் சந்தித்தனர்.இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா இன்று பிற்பகல் 3 மணிக்கு தலைமைச் செயலகத் துக்கு வருவார் என்றும் சட்டப் பேரவை வளாகத்தில் உள்ள முதல்வர் அறையில் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, வீடியோ கான்பரன்ஸ் மூலம் பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பார் என்றும், திறக்கப் படாமல் உள்ள அம்மாஉணவகங் களை திறந்து வைப்பார் என்றும் கூறப்படுகிறது.இதுதவிர பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகை யில், தமிழக மக்களின் நீண்டநாள்எதிர்பார்ப்பான மதுவிலக்கு தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை முதல்வர் வெளியிடுவார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி