மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க, ஆதார் எண் கட்டாயம் இருக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையொட்டி, ஆதார் எண் வைத்துள்ள மாணவர் பட்டியல் தயாரிக்க, பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு,
மத்திய, மாநில அரசுகளின், பிற்படுத்தப்பட்டோர் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகியவற்றின் மூலம், ஜாதி வாரியாக கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதேபோல், மாணவியருக்கு மத்திய, மாநில அரசுகளால் தனித்தனியாகபல திட்டங்களில் நிதியுதவி வழங்கப்படுகிறது.
கல்லுாரிகளில் பிஎச்.டி., ஆய்வுப் படிப்பு மாணவர்கள், தேசிய திறனறித் தேர்வு எழுதிய மாணவர்கள் உள்ளிட்டோருக்கு, தனியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லுாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் மூலம், இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில், பல முறைகேடுகள் நடக்கின்றன; பயனாளிகளுக்கு உதவித்தொகை சரியாகச் சென்று சேர்வதில்லை என, பல தரப்பில் புகார்கள் எழுந்துள்ளன.இந்நிலையில், உதவித்தொகை பெற வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட மாணவருக்கு ஆதார்எண் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில், வங்கிக் கணக்கில் நேரடியாக கல்வி உதவித் தொகையை வழங்க உள்ளதாக, மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:மத்திய அரசின் நிதியுதவி, இனி வங்கிக் கணக்கின் மூலம் நேரடியாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்களின் ஆதார் எண் விவரங்களைசேகரிக்க, உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதனால், தற்போது ஆதார் எண் வைத்துள்ள மாணவர்கள் பட்டியலைத் தயாரிக்க, அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மத்திய, மாநில அரசுகளின், பிற்படுத்தப்பட்டோர் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகியவற்றின் மூலம், ஜாதி வாரியாக கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதேபோல், மாணவியருக்கு மத்திய, மாநில அரசுகளால் தனித்தனியாகபல திட்டங்களில் நிதியுதவி வழங்கப்படுகிறது.
கல்லுாரிகளில் பிஎச்.டி., ஆய்வுப் படிப்பு மாணவர்கள், தேசிய திறனறித் தேர்வு எழுதிய மாணவர்கள் உள்ளிட்டோருக்கு, தனியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லுாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் மூலம், இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில், பல முறைகேடுகள் நடக்கின்றன; பயனாளிகளுக்கு உதவித்தொகை சரியாகச் சென்று சேர்வதில்லை என, பல தரப்பில் புகார்கள் எழுந்துள்ளன.இந்நிலையில், உதவித்தொகை பெற வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட மாணவருக்கு ஆதார்எண் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில், வங்கிக் கணக்கில் நேரடியாக கல்வி உதவித் தொகையை வழங்க உள்ளதாக, மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:மத்திய அரசின் நிதியுதவி, இனி வங்கிக் கணக்கின் மூலம் நேரடியாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்களின் ஆதார் எண் விவரங்களைசேகரிக்க, உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதனால், தற்போது ஆதார் எண் வைத்துள்ள மாணவர்கள் பட்டியலைத் தயாரிக்க, அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி