காலியாக உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்றுதமிழ்நாடு உயர்நிலை , மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியது.
திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை ஒளிவு மறைவின்றி உடனே நடத்த வேண்டும். விலையில்லா நலத் திட்டங்களைச் செயல்படுத்த பள்ளிகளில் தனி அலுவலரை நியமிக்க வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
அனைத்து ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு, பணி மாறுதலுக்கான கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வே.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார்.மாநிலத் தலைவர் வே.நடராஜன், மாநில பொதுச் செயலர் சாமி.சத்தியமூர்த்தி, மாநிலப் பொருளாளர் பு.நடராஜன், தலைமை நிலையச் செயலர் வி.முனியன், இணைச் செயலர் சி.மணவாளன் உள்ளிட்டோர் பேசினர்.
திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை ஒளிவு மறைவின்றி உடனே நடத்த வேண்டும். விலையில்லா நலத் திட்டங்களைச் செயல்படுத்த பள்ளிகளில் தனி அலுவலரை நியமிக்க வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
அனைத்து ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு, பணி மாறுதலுக்கான கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வே.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார்.மாநிலத் தலைவர் வே.நடராஜன், மாநில பொதுச் செயலர் சாமி.சத்தியமூர்த்தி, மாநிலப் பொருளாளர் பு.நடராஜன், தலைமை நிலையச் செயலர் வி.முனியன், இணைச் செயலர் சி.மணவாளன் உள்ளிட்டோர் பேசினர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி