ரூ.39 லட்சம் நிதி ஒதுக்கீடு: பகுதிநேர கலை ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தப்படும் - அமைச்சர் வீரமணி தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2015

ரூ.39 லட்சம் நிதி ஒதுக்கீடு: பகுதிநேர கலை ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தப்படும் - அமைச்சர் வீரமணி தகவல்

பகுதிநேர கலை ஆசிரியர் களுக்கான தொகுப்பூதியம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று கலை, பண்பாடு மற்றும் அருங்காட்சியகங்கள் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித் துள்ளார்.சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற கலை, பண்பாடு மற்றும் அருங்காட்சியகங்கள்துறை மானியக் கோரிக்கை கள் மீதான விவாதத்துக் குப் பதிலளித்து பேசும்போது கே.சி.வீரமணி வெளியிட்ட அறிவிப்புகள்:


சென்னையில் உள்ள ஜவகர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும் பகுதிநேர கலை ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம்ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாகவும், மாவட்ட, விரிவாக்க மன்றங்களில் பணியாற்றும் பகுதிநேர கலை ஆசிரியர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பு ஊதியம் ரூ.1,500-ல் இருந்து ரூ.3 ஆயிர மாகவும், ஊரக ஜவகர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும் பகுதிநேர கலை ஆசிரியர்கள், திட்ட அலுவலர்களுக்கான தொகுப்பு ஊதியம் ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.


இதற்காக ஆண்டுக்கு ரூ.39.54 லட்சம் நிதிஒதுக்கப்படும்.தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மூலம் 2015-16-ம் ஆண்டில் கூடுதலாக 500 நலிந்த கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ. 90 லட்சம் ஒதுக்கப்படும்.


பொம்மலாட்ட கலைஞர்களை...


தோற்பாவைக்கூத்து மற்றும் பொம்மலாட்ட கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அக்கலைகளில் ஆர்வமுள்ளவர் களுக்குப் பயிற்சி அளிக்கவும், பயிற்சி அளிப்போருக்கு மதிப் பூதியம், பயிற்சி பெறு வோருக்கு நிதியுதவி மற்றும் பொம்மைகள், தோல் பொம்மைகள் போன்ற கலைப்பொருட்கள் வாங்குவதற்கும் ரூ.15 லட்சம் ஒதுக்கப்படும்.கருத்தாழமிக்க கலைகள் சார்ந்த தகுதியுள்ள நூல்களைப் பதிப்பிக்க நூலாசிரியர்களுக்கு நூல் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வீதம் 5 நூல்களை பதிப்பிக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை அரசு அருங்காட்சியகத்தின் படிமக் காட்சிக் கூடத்தில் உள்ள மின்னொளி அமைப்புகளுக்கு மாற்றாக நவீன எல்இடி மின்னொளி அமைப்புகள் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது. படிமக்கூட காட்சிப் பெட்டிகளை நவீனப்படுத்தவும், வளர்கலைக் கூடத்தில் உள்ள காட்சிப் பெட்டிகளை நவீனப்படுத்தவும் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.


அகழாய்வு


திருவள்ளூரிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூரில் இருக்கும் ‘கொசஸ் தலையார்’ ஆற்றின் அருகே சுற்றியுள்ள பகுதியில் அகழாய்வுமேற்கொள்ள ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி