தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு பள்ளி கூட மூடப்படவில்லை: கே.சி வீரமணி விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2015

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு பள்ளி கூட மூடப்படவில்லை: கே.சி வீரமணி விளக்கம்

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு பள்ளி கூட மூடப்படவில்லை என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் பள்ளிகல்வித்துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீது இன்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ திராவிட மணி, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து விட்டதாக குற்றம்சாட்டினார்.


அதற்கு பதிலளித்த அமைச்சர் கே சி வீரமணி, கடந்த நான்கு ஆண்டுகளில் 182 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.மேலும், 107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் 810 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், 402 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.கடந்த நான்கு ஆண்டுகளில் 72 ஆயிரத்து 843 ஆசிரியர்கள் நியமிக்கபட்டிருப்பதாகவும் கே சி வீரமணி கூறினார். கடந்த நான்கு ஆண்டுகளில் 53 புதிய கல்லூரிகள் தமிழகம் முழுவதும் தொடங்கபட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி