ஆதார் அட்டை இல்லாத மாணவர்களுக்கு இலவச லேப் டாப் நிறுத்தப்பட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். உச்சநீதி மன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளால்அரசு சலுகை உரிய நேரத்தில் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் 67 மேல்நிலைப்பள்ளியில் படித்த 7000க்கும் மேற்பட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கு மாநில அரசு இலவச லேப் டாப் வழங்குகிறது. பிளஸ் 2 முடித்து கல்லூரியில் படிக்கும் மாணவர்களை வர வழைத்து லேப் டாப் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் தற்போது லேப் டாப் வழங்கப்பட்டு வருகிறது. ஆதார் அட்டை வைத்துள்ள மாணவர்களுக்கு மட்டும் லேப்டாப் வழங்க பள்ளிக்கல்விதுறை இயக்குநர், கலெக்டர் உத்தர விட்டனர். மாவட்டத்தில் ஆதார் அட்டை இல்லாத மாணவர்களுக்கு லேப் டாப் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கிராமப்புற பள்ளியில் சிறப்பு முகாம் நடத்தா ததால் ஏராளமான மாணவர்களால் ஆதார் அட்டை எடுக்க இயலாமல் போனது.ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு லேப் டாப் கிடைக்கவில்லை. ஆதார் அட்டையை காரணம்காட்டி மாணவர்களின் சலுகைகளுக்கு தடை விதிக்க கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிப்பதில்லை. மாணவர்கள் தற்போது ஆதார் அட்டை புகைப்படம் எடுத்தாலும் வந்து சேர 2 மாதம் நீடிக்கும். அதுவரை லேப் டாப்பை பத்திரப் படுத்தி விடுபட்ட மாணவர்களுக்கு கொடுப்பார்களா? அல்லது திரும்ப அனுப்பி விடுவார்களா? என்ற குழப்பம் மாணவர்கள், பெற்றோர் களிடம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: உயரதிகாரிகளின் உத்தரவுபடி ஆதார் அட்டை இல்லாத மாணவர் களுக்கு வழங்கவில்லை. விடுபட்ட மாணவர்கள் பள்ளியிலோ, தாலுகா அலுவலகத்தில் ஆதார் எட்டை எடுத்து கொடுத்தால் லேப் டாப் வழங்கப்படும்' என்றார்.
Sep 28, 2015
Home
kalviseithi
ஆதார் அட்டை இன்றி லேப் டாப் கிடைக்காத மாணவர்கள் ஏமாற்றம்!உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் அதிகாரிகள்
ஆதார் அட்டை இன்றி லேப் டாப் கிடைக்காத மாணவர்கள் ஏமாற்றம்!உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் அதிகாரிகள்
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி