தமிழ் வளர்ச்சித் துறையில் எழுத்தர், கணிப்பொறியாளர் பணிக்கு நேரடி நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2015

தமிழ் வளர்ச்சித் துறையில் எழுத்தர், கணிப்பொறியாளர் பணிக்கு நேரடி நியமனம்

தமிழ் வளர்ச்சி, செய்தித் துறையின் கீழ் செயல்படும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்க கத்தில் ஆவண எழுத்தர், கணிப் பொறியாளர் (தலா ஓர் இடம்) பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.விருப்பம், தகுதி உள்ளவர்கள் வெள்ளைத் தாளில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, பெயர், முகவரி, பிறந்த தேதி, மதம், இனம், கல்வித் தகுதி, முன்னுரிமை கோருவதற்கான சான்று ஆகிய விவரங்களுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும்சுய சான்றொப் பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.


அக்டோபர் 6 கடைசி நாள்


‘இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு), செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், சி-48, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலக வளாகம், 2-வது நிழற்சாலை, அண்ணா நகர், சென்னை 600 040’ என்ற முகவரிக்கு அக்டோபர் 6-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் நேரிலோ, பதிவு அஞ்சலிலோ அனுப்ப வேண்டும்.


மேலும் விவரங்களுக்கு 044-26215023 என்ற தொலைபேசியில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. good mornign sir
    naan Lab Assistant Exam ezhuthi ullen adhan result eppodhu sir publish cheivargal. court case il enna sollappattadhu adharku w p file cheiyappattadha sir i am waiting for that reslt pl give me any information

    ReplyDelete
  2. December ல் புதிய கல்வி கொள்கை _ ஸ்மிருதி இரானி உறுதி . மக்களிடம் கருத்துக் கேட்கப் படும் என அறிவிப்பு

    உங்கள் ஒருவரின் உதவியால் கூட
    1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வரை
    கணினி அறிவியல் கல்வியை தமிழகத்தில் கொண்டுவர முடியும்.

    திரு வெ.குமரேசன் -9626545446(மாநில செயலாளர் ) 

    �லட்சியம் வெல்லும் நிச்சயம்�

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி