நாளை ‘CTET' தகுதித்தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2015

நாளை ‘CTET' தகுதித்தேர்வு

கேந்திரீய வித்யாலயா, ஜவஹர் நவோதயா உள்ளிட்ட சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ‘சி-டெட்' எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


இத்தேர்வினை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்துகிறது.இந்த ஆண்டுக்கான முதலாவது சி-டெட் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 2-வது சி-டெட் தேர்வு தமிழகத்தில் சென்னை, மதுரை உட்பட இந்தியா முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வெழுதுகிறார்கள். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு (தாள்-2) காலை 9.30 முதல் பகல் 12 மணி வரையும், இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு (தாள்-1) பிற்பகல் 2.30 முதல் மாலை 4 மணி வரையும் நடைபெறும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி