போனஸ் வரம்பு உயருமா? மத்திய அமைச்சரவை இன்று முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2015

போனஸ் வரம்பு உயருமா? மத்திய அமைச்சரவை இன்று முடிவு

போனஸ் பெறுவதற்கான மாத ஊதிய வரம்பை உயர்த்துவது தொடர்பான சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளிக்கும்எனத் தெரிகிறது.ரூ.10,000 வரை மாத ஊதியம் பெறும் தொழிலாளர்கள் போனஸ் தொகை பெறத் தகுதியானவர்கள் என சட்டவிதிகள் உள்ளன.


இந்த ஊதிய வரம்பை ரூ.21,000-ஆக உயர்த்துவதற்கான சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அதேபோல தற்போது ரூ.3,500-ஆக உள்ள போனஸ் உச்ச வரம்பை ரூ.7,500-ஆக உயர்த்தவும் அந்த மசோதாவில் வழி வகை செய்யப்படவுள்ளது.இந்நிலையில், போனஸ் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தச் சட்டத் திருத்தம் அமலாக்கப்பட்டால், அதிக தொழிலாளர்களுக்கு போனஸ் தொகை கிடைக்கும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி