அழைப்பு விடுத்தும் பேச்சில்லை: கருவூலத்துறை சங்கங்கள் ஏமாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2015

அழைப்பு விடுத்தும் பேச்சில்லை: கருவூலத்துறை சங்கங்கள் ஏமாற்றம்

அழைப்பு விடுத்த அரசு, பேச்சு நடத்தாததால், கருவூல கணக்குத்துறை சங்கங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளன.சென்னையில் உள்ள, கருவூல கணக்குத்துறை தலைமையகத்தில், சமீபத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், மதுரை மாவட்ட கூடுதல் கருவூல அதிகாரிமூர்த்தி, 57, மாரடைப்பால் இறந்தார்.


'இயக்குனர் முனியநாதன் அளித்த டார்ச்சரே இதற்கு காரணம்' என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.'இயக்குனரை மாற்ற வேண்டும்; மூர்த்தி யின் குடும்பத்திற்கு நிவாரணம் வேண்டும்' எனக்கோரி, கருவூல கணக்குத்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.தலைமைச் செயலகத்தில், கருவூலத்துறை சங்கங்களுடன், அரசு நேற்று நடத்த இருந்த பேச்சு, திடீரென ரத்து செய்யப்பட்டதால், துறை ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க பொதுச்செயலர் சிலுப்பன் கூறுகையில், ''நிதியமைச்சர் ஊரில் இல்லை எனக்கூறி, பேச்சு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது, இயக்குனரை பாதுகாக்கும் முயற்சியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பேச்சு நடத்தி தீர்வு காணாவிட்டால், போராட்டத்தை தீவிரமாக்குவோம்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி