தட்டச்சர்-சுருக்கெழுத்து தட்டச்சர் பணி: கலந்தாய்வு டிசம்பர் 4 முதல் நடக்கிறது; டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2015

தட்டச்சர்-சுருக்கெழுத்து தட்டச்சர் பணி: கலந்தாய்வு டிசம்பர் 4 முதல் நடக்கிறது; டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தட்டச்சர்-சுருக்கெழுத்து தட்டச்சர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு டிசம்பர் 4 முதல் 12-ஆம் தேதி வரையும், 14-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:


தட்டச்சர்-சுருக்கெழுத்து தட்டச்சர் பணிகளை நேரடி நியமனம் செய்யும் வகையில், எழுத்துத் தேர்வு 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 21-இல் நடைபெற்றது. இதில், தேர்வானோருக்கு சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் டிசம்பர் 4 முதல் வரும் 12-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.


சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு மட்டும் 14-இல் கலந்தாய்வுநடக்கும். விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தாற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு செல்லிடப்பேசியில் குறுஞ்செய்தியும் (எஸ்.எம்.எஸ்.,), மின்னஞ்சலில் அட்டவணையும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு வரத் தவறுவோருக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி