இந்தியாவிலேயே தமிழக ஆசிரியர்களே திறமையானவர்கள் : பள்ளி கல்வி இயக்குனர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2015

இந்தியாவிலேயே தமிழக ஆசிரியர்களே திறமையானவர்கள் : பள்ளி கல்வி இயக்குனர்

சென்னை எழும்பூர் டான்போஸ்கோ பள்ளியில் கற்றலில் குறைபாடு உள்ளவர்களை கண்டறிந்து அக்குழந்தைகளை குறைகளை போக்கு, அவர்களை நல்ல மதிப்பெண்கள் வாங்குவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. முதன் முதலாக தொடங்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்தை, பள்ளிக் கல்வி இயக்குனர் டாக்டர் எஸ்.கண்ணப்பன் தொடங்கி வைத்தார்.


பிறகு நிகழ்ச்சியில் பேசிய கண்ணப்பன், “கற்றலில் குறைபாடு என்பது மிகமிக குறைவாகவும், 10 சதவீதத்திற்கு குறைவாக இருக்கக்கூடும். அத்தகைய மாணவர்களை ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும். அவர்களிடம் உள்ள குறைபாடுகளை களைய ஆசிரியர்கள் கவனமாக கையாள வேண்டும்.அந்த குழந்தைகளிடமோ, பெற்றோர்களிடமோ அதுபற்றி கூறாமல் அவர்களை சரி செய்து மற்ற மாணவர்களை போல உருவாக்க வேண்டும்.இந்த பணிகளை மேற்கொள்வது தான் ஒவ்வொரு ஆசிரியர்களின் கடமையாகும். கற்றலில்குறைபாடு உள்ள மாணவர்களை முதலில் அடையாளம் கண்டு அவர்களுக்கேற்றவாறு பாடங்களை கற்று கொடுக்க வேண்டும். அது தான் இந்த பயிற்சி மையத்தின் நோக்கமாகும்.அந்த வகையில் கற்றல் குறைபாடுகளை போக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க கூடிய மையத்தை தொடங்கி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இதில் பயிற்சி பெற்ற25 ஆசிரியைகளும் மற்ற ஆசிரியர்களுக்கு தங்கள் அனுபவத்தை தெரிவிக்க வேண்டும்.ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர் பணியில் மட்டுமே உள்ளது. உலகிலேயே அதிக மனிதவளம் உள்ள நம் நாட்டில் அதனை உருவாக்கும் சக்தியாக ஆசிரியர் பெருமக்கள் திகழ வேண்டும். அந்த பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் உள்ளது.இந்தியாவிலேயே தகுதியான ஆசிரியர்கள் நியமிப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. இங்குள்ள ஆசிரியர்கள் திறமையானவர்கள்” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி