சிவகாசியில் ஜன.31 இல் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2016

சிவகாசியில் ஜன.31 இல் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டி

சிவகாசி ரத்தனம் செஸ் அகாதெமி சார்பில் விருதுநகர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சதுரங்கப் போட்டி சிவகாசியில் ஜன.31 ஆம் தேதி நடைபெற உள்ளது என அந்த அமைப்பின் தலைவர் வி.சுந்தரபாண்டியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


இப்போட்டியில் 9,11 மற்றும் 15 வயதுக்குள்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்கலாம். 9 மற்றும் 15 வயது பிரிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் மாணவ- மாணவிகள் தமிழ்நாடு மாநில சாம்பியன் ஷிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.இப்போட்டி சிவகாசியில் உள்ள அண்ணாமலை நாடார்- உண்ணாமலையம்மாள் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. மேலும் விவரம் பெற 94433-74894 என்றஎண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி