பள்ளிகளில் மதிய உணவு பெற ஆதார் அட்டை கட்டாயம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2017

பள்ளிகளில் மதிய உணவு பெற ஆதார் அட்டை கட்டாயம்

உத்தரப் பிரதேசத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மதிய உணவைப் பெறுவதற்கு ஜூன் 30-ஆம் தேதி முதல் ஆதார் அட்டை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மீரட் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி இக்பால் சிங் கூறியதாவது: பள்ளி மாணவர்கள் மதிய உணவு பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக இருக்க வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, அனைத்து மாணவர்களும் ஆதார் அட்டைகளைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகங்கள் எடுத்து வருகின்றன என்றார் இக்பால் சிங்.
முன்னதாக, பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி