ஜிஎஸ்டியை எதிர்த்து ஆக.8-ல் கடையடைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2017

ஜிஎஸ்டியை எதிர்த்து ஆக.8-ல் கடையடைப்பு

ஜிஎஸ்டியை எதிர்த்து ஆகஸ்ட் 8-ம் தேதி தமிழகத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தருமபுரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜிஎஸ்டியால் வெற்றிலை முதல் மெழுகுவர்த்தி வரை அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்ததுடன், சிறு தொழில்கள் பாதிப்படைந்துள்ளன. 160 நாடுகளில் ஜிஎஸ்டிவரி உள்ளது. ஆனால், இந்தியாவில்தான் அதிகமாகவரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிவிதிப்பைக் குறைக்கவும், எளிமைப்படுத்தக் கோரியும் வரும் 25-ம் தேதி சென்னையில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 8-ம் தேதி தமிழகத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுவையிலும் கடையடைப்பு நடைபெறும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி